விஜயவாடா, மே 30 - ஆந்திர மாநில முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வியாழனன்று பதவியேற்றார். விஜயவாடா நகரத்தில் மே 30 வியாழனன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் நரசிம்மன், ஜெகன்மோ கன் ரெட்டிக்கு, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இந்த விழாவில், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறுகட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு பின்னர், மேடைக்குச் சென்ற, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெகன்மோகன்ரெட்டிக்கு, மலர்கொத்து கொடுத்து, கைகுலுக்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று ஜெகன் ரெட்டி கூறினார்.